வீண் விரயங்கள்...
இன்று மாலை
வழக்கத்தை விட
அதிகமாகவே கோபித்து சண்டையிட்டான்..
அவன் இன்னும்
அதை மறக்கவில்லையென்றும்
நான் செய்தது பெரும் துரோகமென்றும்
வாதிட்டான்..
சில பொய்களை சொல்லி
அதிகமாகவே சரக்கு வாங்கி கொடுத்து
ஒருவாறாக சமாளித்து
அவனையும் அழைத்துக்கொண்டு
நடு இரவில்
வீடு திரும்புகையில்
யாருமில்லா சுரங்கப்பாதையில்
அவன் கழுத்தை இறுக்கிக் கொலைசெய்தேன்..
கடந்த முறை
அவன் சண்டையிட்டபோதே
கொன்றிருந்தால்
சில பொய்களையும்
சரக்கிற்கான காசையும் தவிர்த்திருக்கலாம்
என்றெண்ணியபடியே வீட்டுக்கு ரயிலேறினேன்..
27.03.2008





