
மழைக்கால இரவுகளில்
நெடுஞ்சாலைகளில்
சீறிப்பாயும் வாகனங்களில்
நசுங்கிச் சாகும்
தவளைகளும் நத்தைகளும் சிறுஆமைகளும்
ஆவியாய் வந்து
என் கனவுகளில்
என்னை வேட்டையாட துவங்கும்
என்கிற பயத்தினாலேயே
மழைக்கால இரவுகளையெல்லாம்
விளக்குகளை அணைத்துவிட்ட
அறையின் மூலையில்
தூங்காமல் அமர்ந்தபடி கழிக்கிறேன்..
எனினும் பயமாயிருக்கிறது.
18.06.2009
வேண்டுகோள் : நான் சிறுகதையெல்லாம் எழுதினது இல்லை. எழுதவும் தெரியல.. ஏற்கனவே ஆதி அண்ணா எப்படி சிறு கதை எழுதறதுன்னு பதிவு போட்டு சொன்னாரு.. அதைவிட சிம்பிளா ("சிறுகதை for Dummies", "சிறுகதை writing in 24 hrs, in a week, in 10 days", மாதிரி), யாராச்சும் சொல்லிட்டு போனா புண்ணியமா போகும்.. இன்னும் பத்து நாள்தான் இருக்கு..